Ceylon Muslim News
View Profile →கொழும்பில் வாழும் Bohra Communities வோரா சமுகத்தினரினது வருடாந்த மத வழிபாடு மார்க்க சொற்பொழிவுகள் கலாச்சார சர்வதேச மாநாடு கடந்த ஜூன் 25 - ஜூலை 2 ஆம் திகதி முதல் பம்பலப்பிட்டிய வில் உள்ள வோரா பள்ளிவாசலில் நடைபெறுகின்றது.
இம் மாநாட்டுக்காக இந்தியா ,பாகிஸ்தான், லண்டன் மற்றும் கனடா போன்ற பல நாடுகளில் வாழும் வோரா சமுகத்தினர்கள் ஒன்பது ஆயிரம் பேர்கள் கொழும்பை வந்தடைந்தனா்.
இம் மாநாட்டிற்கு வோரா சமுகத்தினரின் தலைவர் கொழும்பில் தங்கியுள்ளார்கள் குறிப்பாக குஜராத் , பாக்கிஸ்தான் நாட்டில் இருந்தே அனேகமானோர் கொழும்பில் ஒன்று கூடியுள்ளனர் குறிப் பாக வர்த்தக சமுகத்தினரான வோர சமுகத்தினர்கள் இலங்கை கொழும்பிலும் ஒர் இலட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பாடசாலை பள்ளிவாசல் என்பன பம்பலப்பிட்டி மெரன் ரைவ் வீதியில் உள்ளது.
இவர்களது வருகையினால் கொழும்பில் உள்ள சகல சுற்றுலா ஹோட்டல்களிலும் தங்குமிட அரைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு சுற்றுலாத்துறை அந்நியச் செலவானி வருமானமும் கிடைத்து வருகின்றது.
அரசாங்கம் சகல பாதுகாப்பு, போக்குவரத்து பொலிசார் மற்றும் நீர், மிண்சாரம் வாடகை வாகனங்கள், உணவுப் பறிமாறல்கள் போன்ற சகல வசதிகளையும் செய்து கொடுத்துளளமை இங்கு குறிப்பிடத்தக்கது. (அஷ்ரப் ஏ சமத்)
📷 Photo Gallery
Use arrows to browse · Click to view full size








