Special
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்புபல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்புவாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்புயாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்முடிந்தால், பசில் ராஜபக்ஷவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு நாமல் சவால்
Articles

Explore Sri Lanka Muslim History

In-depth research articles on the rich history, culture, and heritage of Sri Lanka's Muslim community.

🔍
Showing 20 articles — page 1 of 2
Early History31 August 2026

அல்லாமா அப்துல் ஹமீது பாகவி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) — தமிழில் திருக்குர்ஆனை மொழிபெயர்த்த பேரறிஞர்

“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற வார்த்தைக்கு, “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்” என்ற அழகிய மொழிபெயர்ப்பைத் தந்தவர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

A
ADMIN
·👁 15·3 min read
Read article →
Notable Figures23 August 2026

இத்தாவின் அவசியத்தை உணர்த்தியதாக கூறப்படும் ஒரு ஆய்வு

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாமிய சட்டங்களில் இடம்பெற்றுள்ள இந்த விதிமுறையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு சம்பவமும் ஆய்வும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

A
ADMIN
·👁 16·2 min read
Read article →
National Contributions 26 July 2026

🏛️ மும்தாஸ் மஹால்: ஒரு முஸ்லிம் குடும்பத்தின் கனவு இல்லம் எவ்வாறு இலங்கை அரசின் வரலாற்றுச் சொத்தானது?

கொழும்பின் அமைதியான பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான மாளிகைகளில் ஒன்றான மும்தாஸ் மஹால் Mumtaz Mahal, ஒரு காலத்தில் செல்வாக்கும் செழிப்பும் பெற்ற முஸ்லிம் குடும்பத்தின் கனவுகளை தாங்கிய இல்லமாக விளங்கியது. அந்த மாளிகையில் நடைபெற்ற சந்திப்புகள், அரசியல் ஆலோசனைகள் மற்றும் சமூக நிகழ்வுகள் அந்தக் காலத்தின் முக்கிய வரலாற்றுச் சுவடுகளை தாங்கி நிற்கின்றன. ஆனால் இன்று, அதே மாளிகை இலங்கை அரசின் முக்கியமான ஒரு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

A
ADMIN
·👁 289·3 min read
Read article →
Early History24 May 2026

பாவா முஹியத்தீன் வலியுல்லாஹ்.

1940 களில் பிறந்ததாக நம்பப்படுகிறவர் தான் பாவா முஹியத்தீன் வலியுல்லாஹ். இவர் எங்கு பிறந்தார், எப்படி இல்ஙகைக்கு வந்தார் என்பது ரகசியமாக இருந்தாலும் மிகவும் சுவாரஷ்யமான ஒரு வரலாறு இவருக்கு இருக்கிறது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிகளில், காடுகளில் இவருடைய தியானங்கள் ஆர்மபகாலத்தில் இருந்ததாகவும், பின்னர் ஊர் மக்கள், விவசாயிகளுக்கு அவருடைய ஆன்மீக அறிவை பரப்பியதாகவும் சான்றுகள் உண்டு.

A
ADMIN
·👁 1.5k·1 min read
Read article →
Community & Society9 May 2026

தெல்தோட்டை மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டவர்

அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் இலங்கை முஸ்லிம் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்ற புலவர்களில் முக்கியமானவராக அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் விளங்குகிறார். ஆன்மீக ஞானம், தமிழ்ப்புலமை, சமூகப் பணிகள் மற்றும் கல்விச் சேவை ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இன்று வரை நினைவுகூரப்படுகின்றன. குறிப்பாக தெல்தோட்டை மண்ணின் கல்வி மற்றும் கலாசார வளர்ச்சிக்காக அவர் செய்த அர்ப்பணிப்புகள் அவரை அப்பகுதியின் பெருமைக்குரிய ஆளுமையாக உயர்த்தியுள்ளன.

A
ADMIN
·👁 1.1k·3 min read
Read article →
Early History7 May 2026

எலிசபெத் மகாராணியின் திருமணத்திற்கு அச்சாறு/ ஊறுகாய் அனுப்பிய கொழும்பு முஸ்லிம்கள்

அச்சாறு (pickle) என்பது இலங்கை முஸ்லிம்களின் திருமணம், கந்துாரி நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத உணவு. இந்தோனேசியைாவைச் சேர்ந்த மலாய் இனத்தவர்களால்அறிமுகப்படுத்தப்பட்டாலும், சோனக முஸ்லிம்களால் தயாரிக்கப்படும் அச்சாறுக்கும் மலாய் முஸ்லிம்களால் தயாரிக்கப்படும் அச்சாறுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. கொழும்பு அச்சாறுக்கு என்று தனி வரலாறு உண்டு. கொழும்பு மாநகரை சேர்ந்த A. C குடும்பத்தினர் அச்சாறு தயாரிப்பதில் பெரும் புகழ்பெற்றவர்கள். உஸ்மானிய கிலாபத்தைச் சேர்ந்த சுல்தான் அப்துல் ஹமீத் அவர்களோடு AC குடும்பத்தினர் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார்கள். நாட்டில் இடம்பெற்ற பெரிய கந்துாரி வைபவங்களுக்கு AC குடும்பம் அச்சாறை இலவசமாக வழங்கி வந்தது. கடந்த 80 வருடங்களுக்கு மேலாக இன்று வரை கஹடோவிடவில் அடங்கியிருக்கும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரான அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் இப்னு உமர் பாதீப் அல் யமனி றஹ்மதுல்லாஹ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நதர் கந்தூரி நிகழ்விற்கும் இவர்களே 80 வருடங்களுக்கு மேலாக அச்சாறை இவர்களே வழங்கி வருகிறார்கள். கொழும்பு AC குடும்பத்தவர்களுக்கும் பிரித்தானிய அதிகாரிகளுக்கும் இடையில் நெருங்கி தொடர்பு இருந்துவந்தது. பிரித்தானிய மகாராணியார் எலிசெபத் II மகாராணியின் திருமண நிகழ்வுக்காக இலங்கை முஸ்லிம்கள் சார்பில் லண்டன் நகருக்கு அச்சாறு அனுப்பிவைக்கப்பட்டது. AC குடும்பத்தின் அன்பளிப்புக்காக நன்றி தெரிவித்து பிரித்தானியாவிலிருந்து நற்சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. (உரிய சான்றுப் பத்திரம் காணாமல் போனதாக குடும்பத்தவர்கள் கூறினார்கள்.) AC குடும்பத்தினர் இன்று "மட்டக்குளி ராதீப் சங்கம்" என்ற பெயரில் தமது ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். AC குடும்பத்தின் பணிகளை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சகோதரர Kaleelur Rahman அவர்கள் முன் நின்று மேற்கொண்டு வருகிறார்கள். AC குடும்பத்தினரும அச்சாறும் பிரிக்கமுடியாத பிணைப்புக்கள். செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்படுத்தப்பட்ட இந்தப் படங்கள் 1930ஆம் ஆண்டு காலப்பகுதியில் எடுக்கப்பட்டவையாகும். source: [facebook post ](https://www.facebook.com/sainthamaruthupasanga)

A
ADMIN
·👁 1.0k·1 min read
Read article →
Notable Figures5 February 2026

இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம் தேசிய வீரர்கள். (வரலாறு)

வரலாறு ♥இலங்கையின் சுதந்திர தினம்♥ ♦04.02.1948 ல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ♦இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆட்சி செய்தவர்கள், ✍போர்த்துக்கேயர் ✍ஒல்லாந்தர் ✍ஆங்கிலேயர் 📝அன்னியர் ஆட்சியில் இருந்து இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய,குரல் கொடுத்த, சகல இனத்தையும் சேர்ந்தவர்கள் தேச பிதாக்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், தேச பக்தர்கள் என அழைக்கின்றோம்.

A
ADMIN
·👁 1.6k·2 min read
Read article →
Community & Society30 November 2025

பைரஹா, இலங்கையின் கோழி இறைச்சி உற்பத்தித் துறையில் அரை நூற்றாண்டு கால தலைமைத்துவ நிறைவு

எம். ஐ. எம். நளீம் ஹாஜியாரினால் நிறுவப்பட்ட பைரஹா, 1975 ஆம் ஆண்டில் தனியொரு பண்ணையுடன் ஆரம்பிக்கப்பட்டது. * பைரஹா, இலங்கையின் முதலாவது பாரிய அளவிலான, தரமான பிரொய்லர் கோழி (Broiler Chicken) உற்பத்தியாளர் ஆகும். * ஆரம்பத்தில் 1985 இல் கம்பஹா மாவட்டத்திலும், பின்னர் புத்தளம், குருநாகல் மற்றும் வேறு சில மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற விவசாயிகளை வலுவூட்டுவதற்காக 'ஒப்பந்த வளர்ப்புத் திட்டத்தை' (Contract Growing Scheme) அறிமுகப்படுத்தியது. இலங்கையின் மிகவும் வளரச்சியடைந்த மற்றும் நம்பகமான கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Bairaha Farms PLC, நாட்டின் போசாக்குத் களத்தை மறுவடிவமைப்பதில் அதன் 50 ஆண்டுகால சிறப்பையும் தலைமைத்துவத்தையும் பெருமையுடன் கொண்டாடுகிறது. 1975ஆம் ஆண்டில் பைரஹா தனது செயற்பாடுகளை தொடங்கிய போது, இலங்கையரின் உணவு மேசையில் கோழியிறைச்சி ஒரு ஆடம்பரப் பொருளாகவே கருதப்பட்டது. ஆனால், ஐந்து தசாப்தங்களுக்குப் பின்னர், நாட்டின் மிகவும் இலகுவாக அணுகக்கூடிய மற்றும் மலிவான புரத மூலமாக கோழி இறைச்சியை மாற்றுவதில் பைரஹா ஒரு கருவியாக இருந்துள்ளது. இந்த மாற்றம், தரத்தைப் பேணுவதில் நிறுவனத்தின் நீடிதத் அர்ப்பணிப்பையும், உணவுத் தன்னிறைவை நோக்கிய இலங்கையின் முன்னேற்றத்தையும் ஒருங்கே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எளிமையான பயணத்தை ஆரம்பித்த பைரஹா, தரமான கோழி பதப்படுத்தல், பாரிய அளவிலான Parent Broiler கோழி, Broiler கோழிப் பண்ணைகள் மற்றும் கோழிகளுக்கான முதலாவது எலிசா ஆய்வகம் (Eliza Laboratory) ஆகியவற்றை முன்னோடியாக நிறுவியதன் மூலம் இலங்கையின் மிகப்பெரிய, முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனம் ஒன்றாக வளரச்சியடைந்துள்ளது. இது Parent Broiler கோழியின் இனப் பெருக்கத்திற்கான Grand Parent மற்றும் Parent கோழிப் பண்ணைகள், தீவன உற்பத்தி, பதப்படுத்தல் மற்றும் நாடு தழுவிய ரிதீயில் கோழி உற்பத்திகளை விநியோகித்தல் எனப் பரந்து விரிந்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பு, பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி சவால்களுக்கு மத்தியிலும், நிலையான தரத்தைப் பேணவும் விலை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் நிறுவனத்திற்கு உதவியுள்ளது. அத்துடன், கிராமப்புற விவசாயிகளுடன் பைரஹா மேற்கொண்டு வரும் வலுவான கூட்டுமுயற்சிகள், அவரக் ளின் குடும்ப வருமானத்தை உயர்த்தவும், நாட்டின் கோழி உற்பத்தித் தளத்தை விரிவுபடுத்தவும் துணைபுரிந்துள்ளன. இது தொடர்பாக Bairaha Farms PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் யாகூத் நளீம் கருத்து தெரிவிக்கையில், "எமது 50 ஆண்டு கால பயணம் தொடரச்சியான கற்றல், புத்தாக்கம் மற்றும் சூழலுக்கேற்ற இசைவாக்கம் ஆகியவற்றைக் கொண்ட பயணமாகும், மாறிவரும் நுகர்வோர் தேவைகள் மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மிக முக்கியமான விடயங்களில் - அதாவது நம்பிக்கையை சம்பாதித்தல், தரத்தை பேணுதல் மற்றும் ஒவ்வொரு இலங்கை குடும்பத்திற்கும் கோழியிறைச்சி கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தப் பெறுமானங்களே பல தலைமுறைகளாக நமக்கு மென்மேலும் வலிமை சேர்க்கின்றன என தெரிவித்தார். எதிர்காலம் குறித்து கருத்துத் தெரிவித்த யாகூத் நளீம் மேலும் கூறுகையில், "மூலப்பொருள் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் போட்டி போன்ற சவால்கள் இருந்தபோதிலும் இலங்கையின் கோழிப் பண்னை தொழிலின் வளரச்சி வாய்ப்புகள் உள்நாட்டிலும் ஏற்று மதிச் சந்தைகளிலும் வலுவாகவே உள்ளன. நாம் முன்னோக்கிச் செல்லும் பாதையில் பாதுகாப்பான, மலிவு விலையில் கோழி இறைச்சியைத் தொடரந்தும் வழங்குவதன் மூலம் நாம் பெற்றுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதே எமது முதன்மை நோக்காகும். புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை மூலம் எமது செயன்முறைகளை மேம்படுத்துவதும் எமது முன்னுரிமையாக இருக்கும்" என அவர் மேலும் குறிப்பிட்டார். பைரஹாவின் வரலாறு, இலங்கையின் கோழி வளர்ப்புத் துறையின் பரிணாம வளரச்சியுடன் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளது. இந்நிறுவனம் 1977 இல் நாட்டின் முதலாவது பெரிய அளவிலான Broiler இனப்பெருக்கப் பண்ணை மற்றும் அடைக்காக்கும் கூடத்தை நிறுவியது, அதனைத் தொடரந்து 1980 இல் ஒரு நவீன பதப்படுத்தும் மையத்தை அமைத்தது. 1985 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒப்பந்த வளரப்புத் திட்டம்' (Contract Growing Scheme) ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்நது. இத்திட்டம் கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற விவசாயிகளை வணிக ரிதீயான கோழி உற்பத்தியில் பங்கேற்கச் செய்து அவர்களை வலுவூட்டியது. இந்த முன்னோடி மாதிரி தற்போது தொழில்துறை முழுவதும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கியது. தேசிய விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தியது, அத்துடன் சோளம் மற்றும் பிற தீவன உள்ளீடுகளுக்கான தேவையை அதிகரித்து உள்ளூர் விவசாயத்தையும் ஊக்குவித்தது. இன்று, 1,300க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த விவசாயிகளின் ஆதரவுடன், பைரஹா நாடு முழுவதும் 13 இடங்களில் இயங்கி வருகிறது. இனப்பெருக்கப் பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகள் முதல் பதப்படுத்தல் மற்றும் விநியோகம் வரையான ஒவ்வொரு பிரிவும் உயர்தரம் மற்றும் செயல்பாட்டுத் தரநிலைகளை கடுமையாக பின்பற்றுகின்றன. இதன் மூலம், பைரஹா உறப் த்திகள் ஒவ்வொரு நாளும் புத்தம் புதியதாகவும் நம்பகத்தன்மையுடனும் சில்லறை விற்பனையாளரக் ளையும் வீட்டுப் பாவனையாளர்களையும் சென்றடைவது உறுதிசெய்யப்படுகிறது. தனது அடுத்த அத்தியாயத்தில் நுழையும் பைரஹா, இலங்கை குடும்பங்களின் உணவு மேசைகளில் ஒரு நம்பிக்கைக்குரிய பெயராகவும், கிராமப்புற அபிவிருத்தியின் பங்காளியாகவும் தொடரந்தும் திகழும். இந்நிறுவனம் தனது செயற்பாடுகளை நவீனமயமாக்குதல், ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் நிலையான பண்ணை நடைமுறைகளில் முதலீடு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம், ஒரு பொறுப்புள்ள உணவு உற்பத்தியாளர் என்ற தனது பாரம்பரியத்தை வலுப்படுத்தி, ஐந்து தசாப்த கால நம்பிக்கையைப் பாதுகாத்து போசாக்கு மட்டத்தை உயர்த்துதல் தேசிய பங்களிப்பை வலுப்படுத்தல் போன்ற பணிகளை செய்து வரும் என்ற வாக்குறுதியை நாட்டு மக்களுக்கு வழங்குவதில் மகிழ்சியடைகின்றது.

B
Beruwala Nanban
·👁 964·3 min read
Read article →

© 2026 SL Muslim History · Designed by Akita Digital Innovation

Privacy PolicyTerms of Use