இலங்கையில் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (20) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (22) அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. இன்று , 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 353,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,163 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
சர்வதேச தங்க சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் மற்றும் உள்ளூர் சந்தை தேவைகளின் தாக்கமே இந்த விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Recent News
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு
25 July 2026பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் குறித்து UGC வெளியிட்ட அறிவிப்பு
11 July 2026வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்
11 July 2026யாழ். செம்மணியில் 400க்கும் அதிக எலும்புக்கூடுகள் அடையாளம்
21 June 2026


