1940 களில் பிறந்ததாக நம்பப்படுகிறவர் தான் பாவா முஹியத்தீன் வலியுல்லாஹ். இவர் எங்கு பிறந்தார், எப்படி இல்ஙகைக்கு வந்தார் என்பது ரகசியமாக இருந்தாலும் மிகவும் சுவாரஷ்யமான ஒரு வரலாறு இவருக்கு இருக்கிறது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிகளில், காடுகளில் இவருடைய தியானங்கள் ஆர்மபகாலத்தில் இருந்ததாகவும், பின்னர் ஊர் மக்கள், விவசாயிகளுக்கு அவருடைய ஆன்மீக அறிவை பரப்பியதாகவும் சான்றுகள் உண்டு.
இறைவனை அடைவது குறித்தும், பெருமையை அழிப்பது குறித்தும் இவருடைய போதனைகள் மதங்களை கடந்து இருந்தது. 1970 களில் அமெரிக்காவிலிருந்து ஒரு குழு அமைதி தேடி உலகம் சுற்றியிருக்கிறது. அவர்கள் இலங்கை வந்து பாவா முஹியத்தீன் வலியை சந்தித்து அவர்களின் முழுச்செலவில் அமெரிக்காவின் Philadelphia வுக்கு அழைத்துச்சென்று அங்கு இவருடைய பெயரில் ஒரு Trust அமைக்கப்பட்டு பலர் இவருடைய போதனைகளை கேட்டு பயன்பெற்றிருக்கிறார்கள்.
1986 இல் இவர் அமெரிக்காவில் அடங்கப்பெற்றிருக்கிறார். மிகவும் Generic ஆன மதம் சாராத ஆன்மீகம் தான் இவரை நோக்கி லட்சக்கணக்கானவர்களை ஈர்த்திருந்தது. அதில் குறிப்பாக, பிர் அவ்ன் பற்றி அவருடைய ஒரு கூற்று இருக்கிறது. Pharaoh வெளியில் உள்ள ஒரு Character மாத்திரம் அல்ல. அது நமக்குள் இருக்கும் பெருமை, அடிபணியாத தன்மை, தன்னை மட்டுமே மேலாக நினைக்கும் குணம். அந்த பிர் அவ்னை மூழ்கடிக்காதவரை இறைவனை அடைய முடியாது என்பது இவருடைய Saying. கடலான உள்ளத்தை பிளந்து முன்னேறும் போது நமக்குள் இருக்கும் பிர்அவ்ன் மூழ்கடிக்கப்படும்.
இந்த இறைநேரசர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் source: https://www.facebook.com/RimazRC
📷 Photo Gallery
Use arrows to browse · Click to view full size





